Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனமழை முதல் மிக கனமழை வரை... பிச்சிகிட்டு அடிக்க போகுது!!

கனமழை முதல் மிக கனமழை வரை... பிச்சிகிட்டு அடிக்க போகுது!!
, சனி, 21 நவம்பர் 2020 (10:06 IST)
நவம்பர் 23, 24 தேதிகளில் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு என தகவல். 
 
வங்க கடலில் நவம்பர் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், அதனால் தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நவம்பர் 23, 24 தேதிகளில் நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், பிதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தற்போதைய தகவலின் படி தமிழகத்தில் நாளை கனமழையும் நாளை மறுநாள் முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக பக்கம் சாயும் அதிருப்தி திமுகவினர்??