Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 5 நாட்களுக்கு மழை: வானிலை மையம் கணிப்பு!

Advertiesment
அடுத்த 5 நாட்களுக்கு மழை: வானிலை மையம் கணிப்பு!
, ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (14:15 IST)
மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல்.


தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் இன்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின் படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் புதுசேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் முதல் ஆக.18 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதோடு சென்னையை பொருத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மலை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் போயிருந்த தடுத்திருக்கலாம்… செருப்பு வீச்சு குறித்து அண்ணமலை!!