Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிச. 14 வரை 5 நாட்களுக்கு மழை - வானிலை மையம் கணிப்பு!!

டிச. 14 வரை 5 நாட்களுக்கு மழை - வானிலை மையம் கணிப்பு!!
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (12:23 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 14 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
 
முன்னதாக நாளையும், நாளை மறுநாளும் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 14 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதோடு சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவலால கல்லூரிகளுக்கு புது கட்டுப்பாடுகள்!!