Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (13:57 IST)
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.


தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் இன்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின் படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அறிவித்துள்ளது.

நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments