Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (16:37 IST)
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல்.  

 
தமிழ்நாட்டில் கோடைகாலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை எட்டியுள்ளது. எனினும் அவ்வபோது பெய்யும் மழையால் வெயிலின் தாக்கம் சில மாவட்டங்களில் குறைந்து வருகிறது.
 
இன்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. 
 
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 8 மற்றும்  9 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments