Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!!
, செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (13:30 IST)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என அறிவிப்பு. 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது
 
இதனால் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். 
 
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதோடு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் புதிதாக 3 மேம்பாலங்கள்! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!