Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றும் நாளையும் கனமழை…. எங்கெங்கு தெரியுமா?

இன்றும் நாளையும் கனமழை…. எங்கெங்கு தெரியுமா?
, புதன், 20 ஜூலை 2022 (13:06 IST)
இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனப்டி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதே போல நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்புப் படை: கமல்ஹாசன் கோரிக்கை