Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு
, செவ்வாய், 24 மே 2022 (16:06 IST)
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
ஆம், வெப்பச் சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு மே 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுநாள் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு மற்றும் அபராதம் !