Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித் சமைத்த உணவு… சாப்பிட மறுத்த மாணவர்களால் சர்ச்சை!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (11:28 IST)
தலித் சமையல்காரர் தயாரித்த காலை உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்ததால் கரூர் பள்ளியில் பரபரப்பு.


1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இத்திட்டத்திற்காக தமிழக அரசு 404.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இலவச காலை உணவுத் திட்டத்தின் கீழ் கரூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் சுமதி என்பவர் காலை உணவை தலித் சமூகத்தை சேர்ந்த சுமதி என்பவர் சமைத்து வந்துள்ளார். தலித் இன பெண் சமைப்பதால் அந்த பள்ளியில் பாதி மாணவர்கள் காலை உணவை புறக்கணித்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று சாதி பாகுபாடு காட்டுவதாக பெற்றோரை எச்சரித்தார். பின்னர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சமையல்காரரிடம் தொடர்ந்து பாரபட்சமாக நடந்து கொண்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments