Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (12:24 IST)
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 8,23,261 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் இவர்களில் 92.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
வழக்கம் போல் இந்த தேர்விலும் மாணவிகள் சாதனை செய்துள்ளனர். மாணவிகள் 4,03,949 பேர் தேர்ச்சி பெற்று, 95.13% வெற்றிநிலையில் உள்ளனர். மாணவர்கள் 3,39,283 பேர் தேர்ச்சி பெற்று, 88.70% சதவீதத்துடன் நிறைவடைந்துள்ளனர். மாணவிகளை விட மாணவர்கள் 6.43% குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
தேர்வுக்கு வராதவர்கள் 11,025 பேர். தேர்வு எழுதிய மொத்த பள்ளி மாணவர்கள் 8,07,098. இதில் மாணவிகள் 4,24,610 பேர், மாணவர்கள் 3,82,488 பேர்.
 
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 9,205 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,460 பேர் தேர்ச்சி பெற்று, 91.91% வெற்றி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் எழுதி, 113 பேர் (90.40%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
தனித்தேர்வர்கள் 4,326 பேர் எழுத, அவர்களில் 950 பேர் மட்டும்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments