Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்வாரியத்திற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (16:52 IST)
அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்சார வாரியத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக மின்சார வாரியத்தை பொறுத்தவரை, அதானி நிறுவனத்தோடு எந்தவிதமான ஒப்பந்தமும் கடந்த மூன்று ஆண்டுகளாக போடவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மின் தேவைக்காக, மத்திய மின்சாரத்துறை வாரியத்தின் அமைப்புகளோடு 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் உறுப்பினர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, என்ற மத்திய அரசின் நிறுவனம், யார் யார் மின் உற்பத்தி செய்கிறார்களோ அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கூட 2.61 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்கின்றனர்.

எனவே, தமிழக மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்துக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் அதை தெளிவுபடுத்த தமிழக அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments