Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (16:45 IST)
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மழை குறித்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம், சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று இரவு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

அதேபோல், காரைக்கால் பகுதியில் நல்ல மழை பெய்யும் எனவும், சென்னை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments