Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் சில மணி நேரங்களில் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

Advertiesment
rain
, திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (14:50 IST)
தமிழகத்தில் இன்னும் சில மணிநேரங்களில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, குமரி புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது
 
அதேபோல் நாளை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதி விருதுநகர் நெல்லை தென்காசி தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம சிறுவன்! – விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி!