Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை..!

Siva
வியாழன், 24 ஏப்ரல் 2025 (07:14 IST)
ஷவர்மா உள்பட ஒரு சில உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மையோனைஸ்க்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் ஒரு உணவு பொருளாக மையோனைஸ் உள்ளது. இதை தயாரிக்க பச்சை முட்டையை பயன்படுத்துவதால் கிருமி தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஒரு ஆண்டு தடை விதிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மையோனைஸ் என்பது முறையற்ற தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபாடு ஆகியவை காரணமாக சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடை மூலம் பச்சை முட்டைகளால் தயாராகும் மையோனைஸ் இனி தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடாது என்றும், அதை மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் மையோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments