Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

Mahendran
புதன், 23 ஏப்ரல் 2025 (18:40 IST)
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உளவுத்துறையின் தோல்வி காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், இருநாள் விஜயமாக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை பாதியில் முடித்து, இன்று காலை அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார். தனது இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டு, முக்கிய அமைச்சர்கள் அதில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும், எதிர்வினையாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் மீதான நடவடிக்கைகள் எப்படி அமையும் என்பது தொடர்பாக நாடு முழுக்க காத்திருப்பும், பதற்றமும் நிலவுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments