Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா ஹாட் ஸ்பாட் அதிகம்...

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (10:34 IST)
மத்திய அரசு அறிவித்துள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் தமிழகத்திலே அதிகம் உள்ளதாக தெரிகிறது. 
 
கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட துவங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
 
இந்நிலையில் ஊரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், ஏப்ரல் 20 ஆம் தேதி சில தளர்வுகள் கொண்டுவரப்படவுள்ளது. ஆனால், இவரை கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது. மத்திய அரசு அறிவித்துள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் தமிழகத்திலே அதிகம் உள்ளதாக தெரிகிறது. 
 
ஆம், தமிழகத்தின் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய மாவட்டங்களாக உள்ளன. 
 
அதேநேரம், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள மாவட்டங்களாக 7 தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments