Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் யார்? ஆளுநருக்கு தமிழக அரசின் பரிந்துரை..!

Siva
புதன், 10 ஜனவரி 2024 (16:39 IST)
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமனம் செய்யுமாறு தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம்  தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவிற்கான காரணங்களை அவர் கூறவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து ஆளுனர் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
தனது ராஜினாமா முடிவை தமிழக முதல்வரிடம் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை தனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments