Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோறு இல்ல; உப்பு தண்ணி தான் குடி தண்ணி: தனித்தீவில் தவிக்கும் தமிழக மீனவர்கள்!

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (09:31 IST)
மீன்பிடி தொழிலுக்காக ஈரான் சென்ற தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தனித்தீவில் தவித்து வருகின்றனர். 
 
கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஈரானுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலுக்காக சென்றுள்ளனர். சுமார் 1000 தமிழக மீனவர்கள் அங்குள்ள தீவுகளில் இருந்தவாரு தொழிலை செய்து வந்துள்ளனர். 
 
இந்நிலையில் ஈரானில் கொரோனா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அநாட்டு அரசு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அதோடு, அங்கு உணவு இல்லாமலும், கடல் நீரை காய்ச்சி குடி நீராக பயன்படுத்தி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் எங்களை காப்பாற்றும் படி மத்திய அரசிடம் வீடியோ மூலம் கோரிக்கை வைத்தனர். இதில் முதற்கட்டமாக 50 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோரை விரைவில் மீட்கும் படி மீனவர்களின் குடும்பத்தாரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments