ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (14:55 IST)
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அந்த பணியை விரைந்து அமைக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் நற்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
 
ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாப்பேட்டை வரையிலான 6 வழிச்சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரருக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் இடையே ஒப்பந்த பிரச்சினையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இந்த சாலையின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது.
 
எனவே இந்த 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
 
அதே போல் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதியளிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments