Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு துணையாக நிற்கும்: முதல்வர் ஸ்டாலின்

Mahendran
புதன், 7 மே 2025 (10:11 IST)
இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு எப்போதும் துணையாக இருக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த இந்தியா, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
 
இந்த தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலுக்கு ராகுல் காந்தி உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், "பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எப்போதும் உறுதுணையாக இருக்கும். நாட்டிற்காகவும் ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்றும் உறுதியாக நிற்கும். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு முழு ஆதரவு" என தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்தது ஏன்? எங்கெங்கே தாக்குதல் நடந்தது..? - ஆபரேஷன் சிந்தூர் புதிய தகவல்கள்!

இந்தியாவின் போரை இந்த உலகத்தால் தாங்க முடியாது! - உலக தலைவர்கள் ரியாக்‌ஷன்!

இந்திய ராணுவத்தால் பெருமை.. ஜெய்ஹிந்த்: ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர்களும் ராணுவத்திற்கு பாராட்டு..!

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments