Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை அடுத்து சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. முக்கிய ஆலோசனையா?

Mahendran
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:21 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்த பிறகு சோனியா காந்தியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தேவையான மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
 
அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மறைந்த சீதாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு சென்ற முதல்வர், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்பில் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.
 
இந்நிலையில், இன்று மாலை முதல்வர் டெல்லியில் இருந்து புறப்பட்டு, இரவில் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்' - குருவிகளை மட்டும் பிடிக்கும் மர்மம் என்ன? இ.பி.எஸ்..!

சினிமா பட பாணியில் சேசிங் - என்கவுண்டர்.! துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் கைது..! நடந்தது என்ன.?

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?

எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்: லட்டு விவகாரம் குறித்து குஷ்பு..!

தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments