Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை அடுத்து சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. முக்கிய ஆலோசனையா?

Mahendran
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:21 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்த பிறகு சோனியா காந்தியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தேவையான மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
 
அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மறைந்த சீதாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு சென்ற முதல்வர், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்பில் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.
 
இந்நிலையில், இன்று மாலை முதல்வர் டெல்லியில் இருந்து புறப்பட்டு, இரவில் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments