Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. அறிவித்த தமிழ் அன்னை சிலை என்னாச்சு? - தமிழ் ஆர்வலர்கள் கவலை

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (10:17 IST)
மதுரையில் தமிழ் அன்னைக்கு சிலை வைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலைக்கு நிகராக ரூ.100 கோடி செலவில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013ம் ஆண்டு 110 விதியின் கீழ் அறிவித்தார். தமிழர்களின் கலை திறனை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அந்த சிலை அமையும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
 
ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான வேலைப்பாடுகள் எதுவும் தொடங்கப்படவில்லை.  இதனால், தமிழ் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 
தமிழ் மற்றும் இலக்கியத்தை வளர்த்த மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments