Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு : மீண்டும் மொழிப்போரை துவக்க வேண்டாம் - ஸ்டாலின் எச்சரிக்கை

Advertiesment
ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு : மீண்டும் மொழிப்போரை துவக்க வேண்டாம் - ஸ்டாலின்  எச்சரிக்கை
, வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (19:01 IST)
குரூப் - சி எனப்படும் துறைசார்ந்த ரயில்வே பொதுப்போட்டித் தேர்வை தமிழில் நடத்த தேவையில்லை என ரயில்வேதுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் ரயில்வே தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :

குரூப் -சி எனப்படும்   ரயில்வே ஊழியர்களுக்கான துறைசார்ந்த தேர்வில் தமிழ் புறக்கணிப்படுவது கண்டிக்கத்தக்கது. 

 
வேதாளம் முறுங்கை மரம் ஏறுவது போல ரயில்வே துறை தேர்வில் தமிழ் மொழியை  புறக்கணிக்கணீப்பதாக ரயில்வே வாரியம்  அறிவித்துள்ளது. திமுக சார்பில் அதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மீண்டும் ,தமிழகத்தில் ,ஒரு மொழிப்போருக்கு எங்களை ஆயத்தமாக்க வேண்டாம்.மேலும் குரூப் - சி தேர்வில் இந்தியில் எழுதினால் சலுகை மதிப்பெண் வழங்குவது போன்று தமிழில் எழுதுவோர்க்கு, சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாம்பு, முதலைகளை கொண்டு மோடியை கொல்வேன்!? – பாகிஸ்தான் பாடகியின் வைரல் வீடியோ