Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் - நெல்லை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (07:52 IST)
கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
 
ஏப்ரல் 27-ந் தேதி, மே மாதம் 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தாம்பரம்-நெல்லை இடையே  இரவு 9 மணிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 
 
அதேபோல் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28-ந்தேதி மே மாதம்5,12,19,26 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 இந்தக் கோடைகால சிறப்பு ரயில்களை தென் மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே துறை அறிவுறுத்துள்ளது. மேலும் இந்த ரயிலின் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments