Publish Date: Tue, 12 Oct 2021 (08:39 IST)
Updated Date: Tue, 12 Oct 2021 (08:41 IST)
நீலகிரியில் கடந்த இரண்டு வாரமாக தேடப்பட்டு வரும் டி23 புலி மீண்டும் கேமராவில் சிக்கியுள்ளது.
நீலகிரி தேவன் எஸ்டேட் பகுதியில் மூன்று பேரை அடித்துக் கொன்ற டி23 புலி பின்னர் அங்கிருந்து தப்பி மசினக்குடி நகர்ந்தது. இந்த புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பாக மசினக்குடி காட்டில் பதுங்கிய புலி எங்கிருக்கிறது என தெரியாமலே இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது ஓம்பேட்டா வனப்பகுதியில் உள்ள தானியங்கி கேமராவில் புலியின் உருவம் பதிவாகியுள்ளது. ஓம்பேட்டா பகுதியில் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட நிலையில் மீண்டும் அது தேவன் எஸ்டேட் நோக்கி செல்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.