Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவை திருமணம் செய்ய வரிசையில் நிற்கும் கோடீஸ்வர பெண்கள்: டி.ராஜேந்தர் பேட்டி

சிம்புவை திருமணம் செய்ய வரிசையில் நிற்கும் கோடீஸ்வர பெண்கள்: டி.ராஜேந்தர் பேட்டி
, செவ்வாய், 19 ஜூலை 2016 (12:08 IST)
தமிழ் சினிமாவில் சிம்பு என்றால் எப்போதும் கிசுகிசுக்கு பஞ்சம் இருக்காது. நயன்தாரா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளை காதலித்த சிம்பு இன்னமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.


 
 
நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறும்பொழுது, சிம்புவைத் திருமணம் செய்து கொள்ள பல பெண்கள், குறிப்பாக பல கோடீஸ்வர பெண்கள் போட்டி போடுகிறார்கள்.
 
ஆனால், சிம்பு தனக்கு கோடிகள் தேவை இல்லை என்று தனக்கு பிடித்த பெண்ணை தேடி வருகிறான். கடவுள் அருளால் நல்ல பெண் கிடைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றார்.
 
சிம்பு தற்போது பல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருவதால் இப்போதைக்கு திருமணம் இல்லையாம். கோடீஸ்வர பெண்கள் எல்லாம் தேவையில்லை, என் வீட்டு கோட்டையில் என்னோட வாழத்தான் பெண் தேவை என சிம்பு கூறியதாகவும் டி.ராஜேந்தர் கூறினார். ஆனால் சிம்புவின் காதல் பற்றி கேட்டதற்கு பதில் கூறாமல் சென்றுவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் மோதலை நோக்கி செல்லும் சுவாதி விவகாரம்: எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த வி.சி.கட்சியினர்