Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கர்ப்பமாக இருந்தது உண்மை: அடித்து சொல்லும் தமிழச்சி!

சுவாதி கர்ப்பமாக இருந்தது உண்மை: அடித்து சொல்லும் தமிழச்சி!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (07:34 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் பல அதிரடி தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவரும் தமிழச்சி தற்போது சுவாதி கர்ப்பமாக இருந்தது உண்மை என்ற தகவலை கூறியுள்ளார்.


 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு, "சுவாதி படுகொலை செய்யப்படும் போது அவர் கர்ப்பமாக இருந்தார்" என்ற வாய் வழி தகவல்களை நம்பி பதிவு செய்யவில்லை. ஆனால் அவருடைய 'போஸ்ட்மார்ட் ரிப்போர்ட்' மூலமாக அவை உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
 
ஆனால் அவை நீதிமன்ற விசாரணையில் காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்படும் போது உண்மைக்கு புறம்பான தகவல்களாகவே இருக்கும் என்கிறார் அந்த நபர்.
சுவாதி படுகொலை செய்வதற்கு காரணமான நபர்கள், அவர்களுக்கு பின்னணியில் இருந்த சில பா.ஜ.கட்சி உறுப்பினர்களும் இந்து பரிவாள அமைப்பினரில் சிலருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது.
 
சுவாதி பிலாலை திருமணம் செய்தது, கர்ப்பமானது, இஸ்லாமிய மதமாற்றத்திற்கு முயன்றது உள்ளிட்ட இந்த காரணங்களினாலே படுகொலை செய்யப்பட்டார். அக்கொலைக்கு பிலாலையே பொறுப்பாக்கி இந்து / இஸ்லாமிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்வதும் தான் அவர்களுடைய முக்கிய குறிக்கோள்.
 
அதனால்தான் சுவாதி கொல்லப்பட்ட மறுநாளே பிலால் கதையை பா.ஜ.கவினரும் இந்து பரிவாள அமைப்புகளும் ஆரம்பித்தன. பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாண்ராமன் சுவாதி கர்ப்பாக இருந்ததை மறைமுகமாக எழுதி சில மணிநேரங்களில் அப்பதிவை நீக்கி விட்டார். அதேப்போல் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஆதரவாக பேசிய பதிவையும் காணவில்லை. அந்த இரு பதிவுகளும் தான் இங்கே.. என இந்த படங்களை பதிவிட்டுள்ளார்.


 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments