Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாதியின் ரத்தமும் ராம்குமாரின் சட்டையில் உள்ள ரத்தமும் வேறு வேறு: போலீஸ் அதிர்ச்சி தகவல்

சுவாதியின் ரத்தமும் ராம்குமாரின் சட்டையில் உள்ள ரத்தமும் வேறு வேறு: போலீஸ் அதிர்ச்சி தகவல்
, வியாழன், 21 ஜூலை 2016 (08:23 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளிவந்தவாறு உள்ளது.


 
 
சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நுங்கம்பாக்கம் போலீசார் ராம்குமாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு, கொலை செய்த விதத்தை நள்ளிரவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்துக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியானது.
 
பின்னர் மேன்சனில் இருந்து கைப்பற்றப்பட்ட ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையையும், சுவாதியின் ரத்த மாதிரியையும் காவல்துறை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியிருந்தது.
 
இந்நிலையில் சட்டையில் இருந்த ரத்தமும், சுவாதியின் ரத்தமும் ஒன்றாக இருந்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் ராம்குமார் தான் இந்த கொலையை செய்தான் என்பது உறுதியான நிலையில் இதில் புதிய திருப்பமாக இரண்டும் ஒரே ரத்தம் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
 
ராம்குமார் சட்டையிலிருந்த ரத்தக்கறையும், சுவாதியின் ரத்த மாதிரியும் ஒரே மாதிரி இருந்ததாக வெளியான தகவல் தவறு என சென்னை மாநகர கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ரத்த பரிசோதனையை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் முடிவுகள் தெரியும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று புதிய அரசின் முதல் பட்ஜெட் - புதிய அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்ப்பு