Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாதி கொலைக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்பு? : பகீர் தகவல்

Advertiesment
சுவாதி கொலைக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்பு? : பகீர் தகவல்
, வியாழன், 30 ஜூன் 2016 (10:32 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் பெங்களூர் மற்றும் மைசுர் ஆகிய பகுதிகளுக்கு சென்று விசாரனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.


 

 
விசாரணையில், சுவாதி சென்னையில் பணி புரிவதற்கு முன்பு, மைசூரில் பயிற்சிக்காக 6 மாதம் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். சம்பந்தப்பட்ட கொலையாளி அங்கேயும் அவரை பின் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. சுவாதி பணிபுரிந்த அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கொலையாளியை அந்த பகுதியில் அடிக்கடி பார்த்ததாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.
 
எனவே, சுவாதி மைசூரில் 6 மாதங்கள் தங்கி பயிற்சி பெற்ற போது, அவருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்க இரு தனிப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். அங்கு அவரோடு தங்கியிருந்தவர்கள், பணிபுரிந்தவர்களிடம் விசாரணை நடைற்று வருகிறது.
 
மேலும், சுவாதியை கொலை செய்ய கொலையாளி பயன்படுத்திய அரிவாள், கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் பயன்படுத்துவது என்பது தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் இதுபற்றியும் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக, அதிமுகவால் மதிமுகவை அழிக்க முடியாது - வைகோ ஆவேசம்