சுவாதியை கொலை செய்தது கூலிப்படை - அதிர்ச்சி தகவல்
சுவாதியை கொலை செய்தது கூலிப்படை - அதிர்ச்சி தகவல்
Publish Date: Sat, 25 Jun 2016 (21:15 IST)
Updated Date: Sat, 25 Jun 2016 (21:00 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமீபத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி மர்ம நபர்களால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
படுகொலை நடைபெற்ற நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால், குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் தடங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர புலன் விசாரணையில் உள்ளனர்.
இந்நிலையில், ரயில்வே காவல்துறை டிஐஜி பாஸ்கர் சம்பவ இத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது, இந்தக் கொலை குறித்து விசாரிக்க ரயில்வே காவல்துறை எஸ்.பி. விஜயகுமார், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையை செய்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றார்.
இதனால், சென்னையில் உள்ள கூலிப்படைையைச் சேர்ந்தவர்கள் ஸிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது.