Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொலை செய்த பின்னர் சுவாதியின் வீட்டருகே பதுங்கிய கொலையாளி!

கொலை செய்த பின்னர் சுவாதியின் வீட்டருகே பதுங்கிய கொலையாளி!
, வெள்ளி, 1 ஜூலை 2016 (09:54 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி சுவாதி என்ற இளம்பெண்ணை படுகொலை செய்த கொலையாளி கொலை செய்த பின்னர் சுவாதியின் வீட்டருக்கே பதுங்கி இருந்தான் என்பது தெரியவந்துள்ளது.


 

 
 
24-ஆம் தேதி காலை 6:30 மணிக்கு சுவாதி மர்ம நபர் ஒருவனால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
கொலை செய்தவன் சுவாதியின் செல்போனை எடுத்து சென்றுள்ளான் என்பது தெரியவந்தது. 24-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ஆன் செய்தே வைத்திருந்திருக்கிறான்.
 
பின்னர் அந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறான். சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியின் வீடும் சூளைமேட்டில் தான் உள்ளது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது காட்டிய இடம் சுவாதியின் வீட்டின் அருகில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து சுவாதியை கொலை செய்த அந்த கொலைகாரன் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை காட்டி சூள்ளைமேட்டில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் சோதனை நடத்துகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு