Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் பாஜக ஜீரோவாக உள்ளது.. அடுத்த பிரதமர் மோடி தான்: எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் பாஜக ஜீரோவாக உள்ளது.. அடுத்த பிரதமர் மோடி தான்: எஸ்.வி.சேகர்
, செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:53 IST)
தமிழகத்தில் பாஜக ஜீரோவாக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் மத்தியில் மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என்றும்  பிரதமராக மோடி மீண்டும் வருவார் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 
 
அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியபோது ’அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரவாக உள்ளது. இந்த தேர்தலில் அண்ணாமலையால் பாஜக மோசமான விளைவை சந்திக்கும்.
 
இப்படியே கவர்னர் செய்தால் ஆளுங்கட்சி மீது தான் மக்களுக்கு அனுதாபம் ஏற்படும். வரும் 2024 தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆக மோடி வருவார், ஆனால் அதே நேரத்தில் மோடி பிரதமர் ஆவதற்கு தமிழகத்தில் இருந்து ஒரு சதவீதம் கூட பலன் இருக்காது. தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்று எஸ்வி சேகர் கூறினார். அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருகின்ற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் எதற்கு? தமிழிசை சௌந்தரராஜன்