Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் அனாதையாக அண்ணாமலை நிற்பார்.. எஸ்வி சேகர் பேட்டி..!

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (17:02 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அண்ணாமலை ஒருநாள் அரசியல் அனாதையாக நிற்பார் என பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலை மற்றும் எஸ்வி சேகர் இடையே கருத்து மோதல் இருந்து வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட அண்ணாமலை, எஸ்வி சேகர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 
 
இந்த நிலையில் முன்னணி இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த எஸ்வி சேகர், ‘பாஜகவை காவல் நிலையம் போல நடத்த அண்ணாமலை ஆசைப்படுகிறார் என்றும் எதிராளியின் தலையை சீவாமல் உடன் வருபவர்களின் தலையை சீவி வருகிறார் என்றும் இப்படியே போனால் அவர் அரசியலில் அனாதையாக தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 
 
கட்சியில் இருந்து என்னை பிரச்சாரத்திற்கு கூட அழைப்பதில்லை என்றும் ஆனால் அதனால் எனக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments