Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ. மரணமடையும் முன்னர் அப்பல்லோவுக்கு வந்து சென்ற மர்ம பெண் யார்?

ஜெ. மரணமடையும் முன்னர் அப்பல்லோவுக்கு வந்து சென்ற மர்ம பெண் யார்?

ஜெ. மரணமடையும் முன்னர் அப்பல்லோவுக்கு வந்து சென்ற மர்ம பெண் யார்?
, திங்கள், 26 டிசம்பர் 2016 (16:09 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.


 
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் சசிகலா புஷ்பா.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போதே சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா. ஜெயலலிதாவின் கையெழுத்து முறைகேடாக பயன்படுத்தப்படலாம் என ஆளுநருக்கு கடிதம் எழுதினார். சசிகலாவை நேரடியாக பல விவகாரங்களில் குற்றம் சாட்டி வருகிறார் சசிகலா புஷ்பா.
 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட கூடாது என்பதற்காக பல வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா. இந்நிலையில் சசிகலா புஷ்பா ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது நடந்த சில ரகசியங்களை கூறி வருகிறார்.
 
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோவுக்கு ஒரு மர்ம பெண்மணி வந்து சென்றதாகவும் அவர் ஐதராபாத்தை சேர்ந்தவர் எனவுக் கூறியுள்ளார். இது தொடர்பான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா ஒப்படைக்க உள்ளதாக அவரது தரப்பில் கூறுகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திண்டாட்டத்திலும், கொண்டாட்டத்திற்கு பாடகி மீது பணமழை - சர்ச்சை வீடியோ