Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவிர்க்க முடியாத தலைவன் – சூர்யாவுக்கு மதுரையில் ரசிகர்கள் போஸ்டர்

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:43 IST)
நீட் தேர்வு பதட்டத்தில் மாணவர்கள் தற்கொலை விவகாரம் குறித்து நடிகர் சூர்யா பேசியதற்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகியுள்ளன.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்த நிலையில், முன்னதாக நீட் தேர்வு பயத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தனது கருத்துகளை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

அவரது கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. அதில் ”திரைப்பட வசனங்களில் மட்டும் குரல் கொடுக்கும் திரைநாயகன் அல்ல.. சமூக பிரச்சினைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் தவிர்க்க முடியாத தலைவன்” என்று புகழ் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments