Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாதேவிக்கு கொரோனா பாசிட்டிவ்: விசாரணை செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனாவா?

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:38 IST)
சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்த வனிதா குறித்து பல திரையுலகினர் விமர்சனம் செய்து வந்த நிலையில் சூர்யாதேவி என்ற பெண் யூடியூபில் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து சூர்யாதேவி மீது வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டார் 
 
அதன்பின் நீதிமன்றத்தில் சூர்யாதேவி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்பதும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வனிதா- சூர்யாதேவி விவகாரம் சற்று அடங்கி உள்ள நிலையில் திடீரென சூர்யாதேவிக்கு கொரோனா என்று வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
சூர்யா தேவியை மட்டுமின்றி அவரை விசாரணை செய்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி என்பவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து சூர்யாதேவி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பெண் காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
சூர்யா தேவி மற்றும் வனிதா விவகாரம் தற்போது தான் அடங்கி உள்ள நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவலால் மீண்டும் ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments