Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாதேவிக்கு கொரோனா பாசிட்டிவ்: விசாரணை செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனாவா?

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:38 IST)
சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்த வனிதா குறித்து பல திரையுலகினர் விமர்சனம் செய்து வந்த நிலையில் சூர்யாதேவி என்ற பெண் யூடியூபில் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து சூர்யாதேவி மீது வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டார் 
 
அதன்பின் நீதிமன்றத்தில் சூர்யாதேவி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்பதும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வனிதா- சூர்யாதேவி விவகாரம் சற்று அடங்கி உள்ள நிலையில் திடீரென சூர்யாதேவிக்கு கொரோனா என்று வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
சூர்யா தேவியை மட்டுமின்றி அவரை விசாரணை செய்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி என்பவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து சூர்யாதேவி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பெண் காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
சூர்யா தேவி மற்றும் வனிதா விவகாரம் தற்போது தான் அடங்கி உள்ள நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவலால் மீண்டும் ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments