Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரை விட ஒரு பரீட்சை பெரிதல்ல - சூர்யா!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (13:33 IST)
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார். 
 
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 4 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டர். இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவை சப்பேரவையில் தாக்கல் செய்தார். 
 
இதனிடையே நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஒரு அண்ணனாக கேட்டுக்கொள்கிறேன். மாணவ, மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். 
 
உயிரை விட ஒரு பரீட்சை பெரிதள்ள. மனது கஷ்டமாக இருந்தால் நண்பர்கள், பெற்றோரிடம் மாணவர்கள் மனம் விட்டு பேச வேண்டும். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாமே சிறிது நேரத்தில் மறைந்துவிடக்கூடியவை. 
 
தற்கொலை, வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பதெல்லாம் உங்களை விரும்புபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவு வெற்றி பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments