Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - பேரறிவாளன் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - பேரறிவாளன் தாயார் கண்ணீர் மல்க பேட்டி
, வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (09:11 IST)
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சமீபத்தில் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்து பின் சிறைக்கு சென்றார்.
webdunia
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என நீதிபதி கோகாய் என தீர்ப்பளித்தார். எனவே, தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
webdunia
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகவே இனியும் கால தாமதம் செய்யாமல் தமிழக அரசு சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக எனது மகன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என  கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் திரையுலகம்: சீமான் எடுத்த அதிரடி முடிவு