Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (12:54 IST)
உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 10 பேர்களை விடுதலை செய்வதாக அறிவித்தது. இதுகுறித்து தமிழக அரசு, கவுசல்யா மற்றும் சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் 
 
இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது தமிழக அரசு, சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் மற்றும் கவுசல்யாவின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது
 
மேலும் இந்த மனுக்கள் மீது பதிலளிக்க கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 10 எதிர் மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகர இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவுக்கு நடுவே மற்றொரு பிரச்சனை: பரிதவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்