Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி: கைது சட்டவிரோதம் இல்லை என அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (10:55 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் அவரது கைது சட்ட விரோதம் இல்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவரது கைது சட்ட விரோதம் என நீதிமன்றத்தின் வழக்கு தொடுக்கப்பட்டது. 
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்த நிலையில் மூன்றாவது நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் இல்லை என தீர்ப்பளித்தார். 
 
இதனை எடுத்து சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என்றும் கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தொடந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதியும் அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எப்படி நம்பி கீழ போறது..? மெட்ரோ பாலம் இடிந்த விபத்தால் சென்னை மக்கள் பீதி!

கைதான ஆர் சி பி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்!

மனைவி மற்றும் 3 குழந்தைகள்.. ராஜஸ்தான் தொழிலதிபரின் குடும்பமே பலி.. சொந்த ஊரில் சோகம்..!

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. அடுத்த 3 நாட்கள் மழை வாய்ப்புள்ள இடங்கள்!

விமானத்தில் இருந்து எப்படி தப்பித்தேன் என்று தெரியவில்லை!" உயிர் தப்பிய ஒரே நபர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments