Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைதியாக இருங்கள்.. இல்லையேல் உங்கள் வீட்டுக்கு ED வரும்.. நாடாளுமன்றத்தில் மிரட்டிய அமைச்சர்..!

அமைதியாக இருங்கள்.. இல்லையேல் உங்கள் வீட்டுக்கு ED வரும்.. நாடாளுமன்றத்தில் மிரட்டிய அமைச்சர்..!
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
நாடாளுமன்றத்தில் அமைதியாக இருங்கள் இல்லையேல் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வரும் என எம்பி ஒருவரை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி என்பவர் மிரட்டியதாக தகவல் வெளியானது. 
 
டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்த மசோதா நேற்று மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மசோதா மீது விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு  ஆம் ஆத்மி எம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோபமடைந்த கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி, ‘ உங்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையேல் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2024 தேர்தலில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது: எஸ்.வி.சேகர் கணிப்பு..!