பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பிற்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (13:08 IST)
சென்னை ஐகோர்ட் அளித்த பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது  

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல சிலைகளை மீட்டு திரும்ப கொண்டு வந்த நிலையில் திடீரென சிலை திருட்டு வழக்குகளை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது. ஆனால் சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் இந்த வழக்குகளை பொன். மாணிக்கவேல் அவர்களே விசாரிப்பார் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையிலும் அவர் ஓராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது இந்த மனுவை சற்றுமுன் விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அசோக் பூசன், நாகேஸ்வரராவ் அமர்வு பொன் மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? பெருந்தலைகள் உருளும் என அச்சமா? - அன்புமணி கேள்வி!

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments