Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (12:31 IST)
செந்தில் பாலாஜி வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு பணம் கிடைத்து விட்டதால் சமரசமாக செல்ல விரும்புவதாக தெரிவித்தனார். இதனையடுத்து இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. 
 
சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. 
 
இந்த தீர்ப்பில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை நடத்த வேண்டும் என்றும் பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க வேண்டும் என்றும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விசாரணை குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments