Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
, வியாழன், 11 மே 2023 (11:57 IST)
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்ற மத்திய அரசின் வாதத்தை தலைமை நீதிபதி அமர்வில் 5 நீதிபதிகளும் நிராகரித்தனர். மேலும்  ஜனநாயக ஆட்சி முறையில், உண்மையான நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர்
 
டெல்லி யூனியன் பிரதேசத்தில் அரசுப்பணியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகவல் தொழில்நுட்ப இலாகா வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்..!