Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்.. ஆனாலும் வெளியே வரமுடியுமா?

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்.. ஆனாலும் வெளியே வரமுடியுமா?

Siva

, வியாழன், 18 ஜூலை 2024 (15:47 IST)
சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் அவர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த இடைக்கால ஜாமின் என்பது தடுப்பு காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வரை மட்டுமே என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
மேலும் வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டு இருந்தார் என்றால் அதற்கும் இந்த ஜாமீனுக்கும் சம்பந்தமில்லை என்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு மட்டுமே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
எனவே சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தும் அவர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமானுக்கு தன் கட்சி ஆரம்பித்த நாள் கூட நினைவில்லையா? திமுக பிரபலம் கிண்டல்..!