Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை கோரி மனு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran
புதன், 12 பிப்ரவரி 2025 (15:40 IST)
பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காதர் பாட்ஷா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுவில், தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்தார் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தன்னை கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
 
எனவே, அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments