Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்சிகளை நீக்க சம்மதித்தது ஏன்? சன் பிக்சர்ஸ் விளக்கம்

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (21:47 IST)
விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் காட்சிகளும், தமிழக அரசின் இலவச திட்டங்களை அவதூறு செய்யும் காட்சிகளும் இருப்பதாக கூறி அதிமுகவினர் நடத்திய போராட்டம் காரணமாக ஒருசில காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு சம்மதம் தெரிவித்தது. இதனால் அதிமுகவினர்களுக்கு தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவினர்களும் பணிந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியை  சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறை செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளூக்கு சேதம் விளைவித்தனர்.

அதனை தொடர்நது திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று திரையரங்குகளுக்கும், திரைப்படம் காண வரும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாக கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதை தெரிவித்து கொள்கிறோம்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments