Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறையில் மந்திரவாதியாக மாறும் சுதாகரன்

சிறையில் மந்திரவாதியாக மாறும் சுதாகரன்
, புதன், 22 பிப்ரவரி 2017 (14:44 IST)
பெங்களூர் சிறையில் உள்ள சுதாகரன் மந்திரவாதி போல் நடந்து கொள்வதாகவும், அவரை வேறு சிறைக்கு மாற்ற கோரியும் மற்ற கைதிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி, ஆகிய மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன், சிறையில் நெற்றி முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு காளி படத்தை வைத்து வழிப்பட்டு வருகிறாராம். 
 
இவருடைய வழிபாடு உடன் இருக்கும் மற்ற சிறை கைதிகளை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மற்ற சிறை கைதிகள் தங்களை வேறு சிறைக்கு மாற்றக் கோரி சிறை காவலர்களிடம் கூறியுள்ளனர். மேலும் சுதாகரன் மந்திரவாதி போல் நடந்து கொள்கிறார், அவரது வழிபாடு எங்களை மிரட்டுவது போல் உள்ளது, தினமும் பல மணி நேரம் காளி வழிபாட்டில் ஈடுப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
 
குற்றவாளியாக சென்ற சுதாகரன் சிறை வாசத்திலும் காளி வழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ‘எடுபிடி’ மன்னிக்கவும் எடப்பாடி பழனிச்சாமி: கேலி செய்த ஸ்டாலின்; சிரித்த திமுகவினர்!