Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் கனமழை.. சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களுக்கு சிக்கல்..!

Mahendran
புதன், 30 அக்டோபர் 2024 (13:32 IST)
சென்னையின் முக்கிய பகுதிகளில் திடீரென கன மழை பெய்து வருவதால், சென்னை நகரம் திடீரென குளிர்ச்சியாக மாறி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக காலையில் வெயில் கொளுத்த தொடங்கிய நிலையில், மாலையில் மட்டும் குளிர்ந்த காற்று வீசுயது. இன்றும் காலை வெயிலுடன் தொடங்கிய நிலையில், சற்று முன்னர் திடீரென வானிலை மாறி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், இன்று முழுநாளும் மழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் காலையில் வெயிலும் இரவில் சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வந்த நிலையில், இன்றைய காலை மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

இருப்பினும் தீபாவளிக்காக சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள் மழை காரணமாக அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சூறாவளி கிளம்பியதே..! மத்திய பாஜக அரசை கண்டித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி.. ஈபிஎஸ் வரவேற்பு

அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவனை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர்.. நெல்லையில் பரபரப்பு..!

மாதம் 44 ஆயிரம் சம்பளம்..! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! - முழு விவரம்!

யார் கையிலயும் காசு இல்ல.. டிஜிட்டல் பே மூலம் பிச்சை! அப்டேட் ஆன பிச்சைக்காரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments