Publish Date: Thu, 18 Nov 2021 (14:01 IST)
Updated Date: Thu, 18 Nov 2021 (14:02 IST)
பொள்ளாச்சி அருகில் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே திடீரென வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சென்னை உள்பட பல நகரங்களில் ஆங்காங்கே திடீரென பள்ளம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளம் காரணமாக அந்த பகுதிக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
தற்போது பள்ளத்தை மூடும் நடவடிக்கைகளை காவல்துறை மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் பலத்தை மூடியுடன் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது இந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்,